உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள இடம் ஆய்வு

Published On 2022-12-20 13:24 IST   |   Update On 2022-12-20 13:24:00 IST
  • மாவட்ட நீதிபதி அப்துல்காதார் ஆய்வு செய்தார்
  • பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைய உள்ள இடம் ஆய்வு ெசய்யப்பட்டது

புதுக்கோட்டை:

பொன்னமரவாதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, சட்ட அமைச்சர் ரகுபதி பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள இடத்தை புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல்காதார் ஆய்வு செய்தார். இதில் இலுப்பூர் ஆர்.டீ.ஓ குழந்தைசாமி, தாசில்தார் பிரகாஷ், பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன் மற்றும் நீதிமன்றம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை. பேரூராட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News