உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

Published On 2022-07-06 13:41 IST   |   Update On 2022-07-06 13:41:00 IST
  • சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • 25 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர் என ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த கீழாத்தூர் தங்கவேல் மகன் மோகன் ( வயது 53 ) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 25 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News