உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சம்

Published On 2022-06-23 08:44 GMT   |   Update On 2022-06-23 08:44 GMT
  • அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
  • இதில் உண்டியலில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 954-மும், 128 கிராம் தங்கமும், 170 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதில் உண்டியலில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 954-மும், 128 கிராம் தங்கமும், 170 கிராம் வெள்ளியும் கிடைத்தது. இந்த பணியில் உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் முத்துகுமரன் கோவில் பணியாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News