உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த ஜல்லி கட்டு காளை
- பொன்னமராவதி அம்மன்குறிச்சியில் ஜல்லிகட்டு காளை கிணற்றில் தவறி விழுந்தது
- தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர்
புதுக்கோட்டை,
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியை சேர்ந்தவர் சின்னு. இவரது 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி காளையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.