- மகளை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார்
- அக்கிரி கல்லூரியில் படித்து வருகிறார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதியைச்சேர்ந்த அழகர் மகன் அன்புநாதன்(வயது 51) இவர் குழிபிறை தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா(45).இவர்களது மகள் மோனிகா(19). கோயமுத்தூரில் அக்கிரி கல்லூரியில் படித்து வருகிறார்.
கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு பணம் கட்டுவதற்கு மோனிகா தனது தந்தையான அன்புநாதனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பணம் தரமுடியாது என்னிடம் ஏன் கேட்கிறாள் என்று சொல்லி மகளை தாக்கியுள்ளார். இதில் மோனிகாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் மோனிகா புகார் செய்ததன் பேரில் சப்.இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்புநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.