உள்ளூர் செய்திகள்

இரும்பு மேற்கூரை விழுந்து விவசாயி பலி

Published On 2023-08-23 13:29 IST   |   Update On 2023-08-23 13:29:00 IST
  • பொன்னமராவதி வாரச்சந்தையில் இரும்பு மேற்கூரை விழுந்து விவசாயி பலி
  • பலத்த சூறைக்காற்றினால் நேர்ந்த பரிதாபம்

பொன்னமராவதி, 

பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப் பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News