உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்

Published On 2023-06-29 08:29 GMT   |   Update On 2023-06-29 08:29 GMT
  • புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கபட்டுள்ளது
  • 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

2023-2024ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில், 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்து, அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லை. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News