உள்ளூர் செய்திகள்
- வாகனம் மோதி முதியவர் பலியானார்
- சாலையோரமாக நடந்து சென்றார்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வடவளாம் ஊராட்சி சேர்ந்தவர் சந்தானம் (வயது 60) இவர் மாங்கனம்பட்டி சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த போஸ் நகரை சேர்ந்த கல்வெத்மொய்தீன் (39) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர் பாரவிதமாக இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானம் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செம்பட்டிவிடுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.