உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2023-08-13 13:45 IST   |   Update On 2023-08-13 13:45:00 IST
  • ஆலங்குடியில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
  • ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை,

ஆலங்குடி அருகே சுடலக்கொல்லையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 27). டிரைவர். இவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News