உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-04-10 13:36 IST   |   Update On 2023-04-10 13:36:00 IST
  • கல்லூரி மாணவி மாயமானார்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே உள்ள பூசாரி பண்ணைக்களம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 45). இவரது மகள் சோபனா (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News