உள்ளூர் செய்திகள்

நார்த்தாமலையில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-08-27 13:53 IST   |   Update On 2023-08-27 13:53:00 IST
  • விஷ இலையை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
  • கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீரனூர் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் லத்திகா (வயது 19). இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லத்திகா விஷ இலையை தின்று உள்ளார். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லத்திகா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News