உள்ளூர் செய்திகள்

422 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Published On 2023-09-12 09:24 GMT   |   Update On 2023-09-12 09:24 GMT
  • 422 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்
  • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News