உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர் ஆசிட் குடித்து தற்கொலை

Published On 2023-08-31 11:47 IST   |   Update On 2023-08-31 11:52:00 IST
  • புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • கள்ளத் தொடர்பை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை புதிய பேரூந்து நிலையத்தில் துப்புரவு பணி மேற்கொண்டு வருபவர் மணிகண்டன்(வயது 28). இவருக்கும் திருமயம் தாலுகா கடையக்குடி நரி குறவர் காலனியை சேர்ந்த சங்கீதா(வயது 28) என்பவருக்கும் 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கும் சங்கீதா சகோதரி துர்காவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை மனைவி கண்டித்ததால் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை மணிகண்டன் குடித்து மயஙகி உள்ளார். அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News