உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் வாலிபர் சரண்

Published On 2023-09-05 08:07 GMT   |   Update On 2023-09-05 08:07 GMT
  • கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்.
  • தொழிலாளி கொலை வழக்கில்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனூர் ஊராட்சி கருகப்பூலாம்பட்டியை சேர்ந்தவர் ரங்கையா (வயது 55). தொழிலாளி.

இவரை அதே பகுதியை சேர்ந்த வடிவேலு (35) என்பவர் முன்விரோதம் காரணமாக கழுத்தில் கத்தியால் வெட்டினார். இதில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கையா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய வடிவேலுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த வடிவேலு புதுக்கோட்டை கோர்ட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 ல் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News