உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-08-03 09:49 GMT   |   Update On 2022-08-03 09:49 GMT
  • வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை நடந்துள்ளது
  • குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவில் வசித்து வருபவர் முகமது ஹனிபா (வயது66). இவர் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை ப ார்த்து அதிர்ச்சியானர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 47 பவுன் நகை மற்றும் ரூ.40 திருடுபோயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் ேபரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News