உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் பெண்ணை தாக்கிய கொத்தனார்

Published On 2023-09-27 11:47 IST   |   Update On 2023-09-27 11:47:00 IST
  • புதுக்கோட்டை ஆதனகோட்டையில் பெண்ணை தாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டு உள்ளார்
  • காயமடைந்த பெண் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மேலமுத்துராஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இளஞ்சியம் (வயது 35). இவர், பழைய ஆதனக்கோட்டையில் நூறுநாள் வேலை பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (31) என்பவருக்கும், இளஞ்சியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இளஞ்சியத்தை கட்டையால் ராஜசேகர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணிகிரி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News