உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே நானாக்குடியில் குடிநீர் வசதி கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

Published On 2023-10-06 06:48 GMT   |   Update On 2023-10-06 06:48 GMT
  • குடிநீர் வசதி கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
  • அறந்தாங்கி அருகே நானாக்குடியில் சாலை மறியல்

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோ வில் தாலுகா நானாக்குடி கிரா மத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன.

இந்நிலையில் இங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படு கிறது. இதனை வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை யடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குட ங்களுடன் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையிலுள்ள நானாகுடி முக்கத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இட த்திற்கு விரைந்த ஆவு டையார்கோவில் காவல்த்துறையினர் மறி யவில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர்.

அதிகாரிகளின் உறுதி யளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தா ங்கி ஆவுடையார்கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

Tags:    

Similar News