உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் கலை சங்கமம் நிகழ்ச்சி

Published On 2023-02-24 07:01 GMT   |   Update On 2023-02-24 07:01 GMT
  • புதுக்கோட்டையில் இன்று கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது
  • இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு, கலை சங்கமம் நிகழ்ச்சி இன்று (24-ந் தேதி) மாலை 06.00 மணியளவில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்) நடைபெற உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக மாவட்டம்தோறும் கிராமப்புற கலை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், கிராமப்புற கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கலை சங்கமம் நிகழ்ச்சியினை கண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News