உள்ளூர் செய்திகள்

தொன்மை பாதுகாப்பு மன்ற விழா

Published On 2023-08-13 13:05 IST   |   Update On 2023-08-13 13:05:00 IST
  • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது
  • பண்டைய தமிழர்களின் நாகரீகம், வாழ்வியல் முறை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை, 

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற விழா, தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் வெ.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.உதவி தலைமை ஆசிரியர் தெய்வீகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பேசும் பொழுது, தமிழகத்தின் தொல்லியல் ஆய்வுகள் நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் அதில் மாணவர்களின் பங்கு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் பண்டைய தமிழர்களின் நாகரீகம் | வாழ்வியல் முறை குறித்து அறிந்து கொள்ளவும் பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். விழாவில் ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர் கோகுல கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News