உள்ளூர் செய்திகள்

ஊழல் தடுப்பு வார உறுதி மொழி

Published On 2023-10-31 08:08 GMT   |   Update On 2023-10-31 08:08 GMT
  • புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது
  • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்

 புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

Tags:    

Similar News