உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை

Published On 2023-02-17 12:58 IST   |   Update On 2023-02-17 12:58:00 IST
  • தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை ெரயில்வே போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60), இவர் இரும்புக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று ரெத்தினக்கோட்டைக்கு தனது மிதிவண்டியில் சென்று அருகே இருந்த தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக காரைக்குடியிலிருந்து திருவாரூர் மார்க்கமாக சென்ற ெரயில் அவர் மீது ஏரியுள்ளது. இதில் கிருஷ்ணமூர்த்தியின் தலை துண்டிக்கப்பட்டு அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை ெரயில்வே போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ெரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News