உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

Published On 2023-10-19 13:58 IST   |   Update On 2023-10-19 13:58:00 IST
  • கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்

கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.,வின் 52 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது . யூனியன் சேர்மனும் கிழக்கு ஒன்றிய கழகச் செயலா ளருமான கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி .விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் துரை செந்தில், 'தலைமைக் கழகப் பேச்சாளர் நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றி னார்கள்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் கவிதாசிவா, சக்திவேல் , ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கம் விடுதி பெருமாள் ,விராலி ப்பட்டி முத்து க்குமார், அண்டனூர் இளங்கோ வன், மாவட்ட பாசறை அருண் பிரசாத் .நகரச் செயலாளர் அய்யா .செந்தில்குமார், துணைத் தலைவர் வெங்கடேசன், சீனிவாசன், செந்தில்குமார். சாமிநாதன், ரவி, எம் ஏ ஆர் மணி, ஆவின் தியாக ராஜன், அய்யர.மணிமாறன்,தங்க குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News