உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம்

Published On 2022-12-30 09:42 GMT   |   Update On 2022-12-30 09:42 GMT
  • ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்
  • கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் 2022-23 ஆண்டில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு(அரிசி) செயல் விளக்கத்திடல் ஆனது திருந்திய நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்தல் பற்றியும், உயிர் உரங்கள் நுண்ணூட்டம் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலையின் பச்சைய தன்மை பொறுத்து யூரியா உரத்தினை பயன்படுத்துவதால் அதிகளவு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது. நுண்ணூட்டக் கலவை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி சீராக்கப்பட்டு தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிய முறையில் எடுத்துச் செல்லவும் வழி வகை செய்கின்றன என உணவு மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகர் சர்புதீன் விவசாயிகள் மத்தியில் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்டக் கலவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மத்தியில் கூறினார்கள். விராலிமலை வேளாண்மை விரிவாக்கம் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.


Tags:    

Similar News