உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்து கோழியை விழுங்கிய மலைப்பாம்பு

Published On 2023-01-01 09:27 GMT   |   Update On 2023-01-01 09:27 GMT
  • பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது
  • தீயணைப்புதுறையினர் மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிவாஜிகணேசன் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தூத்தூர் கிராமத்திற்கு சென்று கோழியை முழுங்கி அப்பகுதி மக்களை அச்சுறுத்திய பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர் . பின்னர் அந்த மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.





Tags:    

Similar News