வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கூட்டம்
- புதுக்கோட்டையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் மெர்சி தலைமையில் ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், பத்தாவது செயற்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.மாவட்டச் செயல் அலுவலர் மற்றும் செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய ப்பட்டது மற்றும் புதிய அலுவலர்கள் பணியில் சேர்ந்த விவரங்கள் குறித்தும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கான உள் தணிக்கை மற்றும் வெளித் தணிக்கை நடைபெ ற்றதற்கான ஒப்புதல் குறித்தும், திட்டத்தின் மூலம் புதிதாக துவங்கப்பட்டஃ ஏற்கனவே செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கு நிதி விடுவித்த விபரம் தெரிவித்தல் குறித்தும் கலந்தாலோசனை நடைபெற்றது இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.