உள்ளூர் செய்திகள்

988 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Published On 2022-08-23 13:49 IST   |   Update On 2022-08-23 13:49:00 IST
  • 988 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
  • அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியத்திற்குற்பட்ட அரசு பள்ளிகளில் 988 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் மொகைதீன் காதர், சடையம்பட்டி, ஆலவயல், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன், பொன்.புதுப்பட்டி மற்றும் திருமயம் ஒன்றியத்தில் லெம்பலக்குடி, திருமயம், பி.அழகாபுரி ஆகிய அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு , 988 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, மணிமொழி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா, பேரூராட்சி தலைவர் சுந்தரி, வட்டாட்சியர் பிரகாஷ், தி.மு.க. ஒன்றியச்செயலர்கள் அடைக்கலமணி, நகரச்செயலர் அழகப்பன், வார்டு உறுப்பினர்கள் ராஜா, புவனேஸ்வரி காளிதாஸ் அழகப்பன், பள்ளி தலைமையாசிரியர்கள் நிர்மலா, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News