உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2023-07-08 07:32 GMT   |   Update On 2023-07-08 07:32 GMT
  • புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது
  • அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத்தலைவர் தவ.பாஞ்சாலன், கவுன்சிலர் ரமேஷ்பாபு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News