உள்ளூர் செய்திகள்

3 கடைகளுக்கு 'சீல்'

Published On 2023-09-06 08:00 GMT   |   Update On 2023-09-06 08:00 GMT
  • 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
  • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமணசமுத்திரம் அருகே லெம்பலக்குடி, லேணா விளக்கு ஆகிய இடங்களில் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் தூரத்தில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் நேற்று போலீசாருடன் சென்று சம்பந்தப்பட்ட 3 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 3½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 கடைகளுக்கு 'சீல்' வைத்து உணவு பாதுகாப்பு துறையினர் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News