உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி பகுதியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
- அறந்தாங்கி பகுதியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யபட்டன
- சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் மற்றும் இதர பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பேராவூரணி சாலையில் ஒதுக்குப்புறத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ரசாயனம் கலந்த பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.