பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு
- பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.
- பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஆணையர் பிரதான் பாபு தலைமையில், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை உறுதிபடுத்துவது, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது என பெண்களுக்கான கோட்பாடுகளை நிலைநாட்டவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே பிரசாரத்தின் நோக்கமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.