கோப்பு படம்.
ரேசன் கார்டுகளுக்காக பொதுமக்கள் அலைக்கழிப்பு
- கடந்த 10 மாதங்களாக ரேசன் கார்டுக்கு விண்ண ப்பிக்கும் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
- இதனால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமலும், மாணவ-மாணவிகள் அசு சலுகை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.
நிலக்கோட்ைட:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், கொடைக்கானல் ஆகிய தாலுகாக்களில் பொதுமக்களுக்கு ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக திருமணம் செய்தவர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் தங்களுக்கு தனியாக ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த 10 மாதங்களாக ரேசன் கார்டுக்கு விண்ண ப்பிக்கும் பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமலும், மாணவ-மாணவிகள் அசு சலுகை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ரேசன் கார்டுகள் சில பிரச்சினை யால் வரவில்லை. விலைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரி வித்தனர். ஆனால் பொது மக்கள் கூறுகையில், அதிகாரிகள் முறையான பதில் கூறாமல் தங்களை தொடர்ந்து அலைக்கழி ப்பதாக தெரிவித்தனர்.