உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரியகுளம் அருகே மக்கள் தொடர்பு முகாம்

Published On 2023-08-03 04:57 GMT   |   Update On 2023-08-03 04:57 GMT
  • முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
  • பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி:

பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டை முருகமலை நகரில் வருகிற 9-ம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொைக, புதிய ரேசன்அட்டை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விபத்து நிவாரணம்,

விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ெகாள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News