உள்ளூர் செய்திகள்

ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கிய காட்சி.

சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மதிய உணவு 750-வது நாளை எட்டியது

Published On 2023-07-13 08:25 GMT   |   Update On 2023-07-13 08:25 GMT
  • தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.
  • 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தேர்ந் தெடுக்கப்பட்டது முதல் மதியம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.

இதற்காக தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக ராஜா எம்.எல்.ஏ. பதவி ஏற்றது முதல் வழங்கி வரும் இந்த உணவானது 750 நாட்களை அடைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதிய உணவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக் கையில் பலர் உணவை பெற்று செல்கின்றனர். 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொது மக்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News