உள்ளூர் செய்திகள்

பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2023-03-10 15:42 IST   |   Update On 2023-03-10 15:42:00 IST
  • நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
  • இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் ஆவத்துவாடி, ஊத்தங்கரை ஒட்டம்பட்டி (புதூர்புங்கனை), போச்சம்பள்ளி சாலூர்(ரங்கம்பட்டி), பர்கூர் ஆம்பள்ளி, சூளகிரி அத்திமுகம், ஓசூர் பூனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை சென்னமாலம்(கக்கதாசம்), அஞ்செட்டி தாலுகா பிலிகுண்டு ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

எனவே, இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News