உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-01-16 08:30 GMT   |   Update On 2023-01-16 08:30 GMT
  • சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது.
  • தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் மணலூர் பேட்டை - ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது  இந்நிலையில் தியாக துருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் சாலை விரி வாக்கம் பணிகளின் போது குடிநீர் வழங்கும் பைப் லைன் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகு தியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 3 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை  இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

  போக்குவரத்துகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தியாகதுருகம்- திருக்கோ விலூர் சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News