உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

Published On 2022-08-16 09:12 GMT   |   Update On 2022-08-16 09:12 GMT
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.
  • இதில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சா.சின்னையன் மாணவர்களுக்கு உதவி பொருட்கள், இனிப்பு வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் துரைராஜ், தலைமை ஆசிரியர் ஜாசி, ஆசிரியர் முத்துக்குமரன், ஊராட்சி மக்கள் பிரதிநிதி பொன் இளையகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் ஊராட்சி மக்கள் பிரதிநிதி அ.மேனகா, வி.கோவிந்தராஜ், சாமூண்டீஸ்வரி, ஆ.ஜெயந்தி, செ.சத்யா மற்றும் உறுப்பினர்கள் , ஊராட்சி செயலர் தெ.இளங்கோவன், மக்கள் நல பணியாளர் செல்வி மற்றும் மாணவ மாணவிகள் , பொதுமக்கள், பணி தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் முத்துகுமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News