உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை- கலெக்டர் தகவல்

Published On 2022-12-27 08:01 GMT   |   Update On 2022-12-27 08:01 GMT
  • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பெறப்பட்டது.
  • அச்சான்றிதழை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசை மற்றும் வாரியம் மூலம் வழங்கப்படும் புதிய குடியிருப்புவீட்டினை வாங்குவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலானகா சோலை யினை வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் 2021 -ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுடன் , விருதுத்தொகையாக ரூ.25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆறுமுக சீதாராமனுக்கு, முதல மைச்சர் வழங்கினார்.

அச்சான்றிதழை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.சுகபுத்ரா , கூடுதல் கலெக்ட (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News