உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட தேளி மீன்கள்.

வடமதுரை அருகே தடை செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்

Published On 2022-07-27 05:09 GMT   |   Update On 2022-07-27 05:09 GMT
  • தடைசெய்யப்பட்ட தேளிவகை மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
  • 150 கிலோ தேளிமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

வடமதுரை:

வடமதுரை அருகே குஜிலியம்பாறை கடைவீதியில் தடைசெய்யப்பட்ட தேளிவகை மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.

இதனைதொடர்ந்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 150 கிலோ தேளிமீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

மேலும் இதுபோல் தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

Similar News