உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் நாள் விழாவில் பேராசிரியர் பேச்சு

Published On 2023-08-25 12:16 IST   |   Update On 2023-08-25 12:16:00 IST
  • காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக நாட்டுப்புறவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • விழாவில் பல்துறை மாணவர்களும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் அருகே காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக நாட்டுப்புறவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பல்கலை க்கழகப் பதிவாளர் (பொறு ப்பு) ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பழனி யாண்ட வர் கலை பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார்.

உலக நாட்டுப்புறவியல் நாள் கொண்டாடப்படு வதன் நோக்கம் குறித்துக் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை க்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முத்தையா எடுத்துரைத்தார். பல்கலை க்கழகப் பதிவாளர் (பொறு ப்பு) ராதாகிருஷ்ணன் பேசுகையில், இந்தியா கிராமங்களில் வாழ்கின்றது என்றார் காந்தியடிகள். கிராம மக்கள்தான் ஆடம்பர மில்லாத எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களி டம்தான் நமது முன்னோ ர்கள் கடைப்பிடி த்த தொன்மையான பண்பாடு உயிர்ப்புடன் இருக்கின்றது. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் மனநிலையும் விட்டுக்கொடு க்கும் பண்பும் அவர்களிட ம்தான் காண ப்படு கின்றது. முன்னோ ர்கள் பின்பற்றி வந்த பல நல்ல செயல்பாடு களை நாம் இன்று இழந்து விட்டோம்.

இயற்கையைப் பாதுகாக்க மற்றும் உறவுகளை நேசிக்கத் தவறிவிட்டோம். முன்னோ ர்கள் கடைப்பித்த நல்ல பழக்கவழக்கங்களை நமது வருங்கால சந்ததி களுக்கும் கற்றத்தர வேண்டும் என்றார். தொடர்ந்து 'வழி நடையில் வாழும் பண்பாடு' என்னும் தலைப்பில் சிறப்பு ரை யாற்றிய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசுகை யில், பழனி முருகன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். இதனால் மக்கள் மனவலிமையும் உடல் வலிமையும் பெறு கின்றனர்.

நவீன வாழ்க்கை தரும் நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து உறவாடுவதற்கும் தெய்வத்திற்குக் காணி க்கைகள் செலுத்துவதன் மூலம் இனம்புரியாத நம்பிக்கையைப் பெறு வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் விருந்தோம்பல், விட்டு க்கொடுக்கும் மனப்பா ன்மை, ஒற்றுமை உணர்வு, சமத்துவ மனப்பான்மை போன்றவை வழிநடைப் பயணத்தால் வளர்கின்றன. பாதையாத்திரை மக்களுக்குப் பண்பாட்டைக் கற்றக் கொடுக்கும் புனித யாத்திரையாகத் திகழ்கி ன்றது என்றார்.

தொடர்ந்து பல்கலைக்கழக நுண்கலை உதவிப் பேராசிரியர் ராஜராஜன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார். முதுகலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் மாண வர்கள் பழமொழி விடுகதை களை எடுத்துக் கூறினர். நிகழ்வில் பல்துறை மாணவர்களும், ஆய்வாள ர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News