உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

ரெட்டியார் சத்திரத்தில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சி

Published On 2022-12-26 13:05 IST   |   Update On 2022-12-26 13:05:00 IST
  • ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது.
  • செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் வழங்க, துணை இயக்குநர் அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றியும் கூறினார்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் மாங்கரை கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் சோலார் ஒளி விளக்கு பொறி இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பயனாளி மணிகன்டனுக்கு சூரிய ஒளி மூலம் பூச்சி கட்டுப்படுத்தும் விளக்கு முழு மானியத்தில் வழங்கி செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இச்செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா வழங்க, துணை இயக்குநர் விஜயராணி அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் சந்திரமோகன் ஆலோசனைபடி எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சியாளர் தேவராஜன் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News