உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

Published On 2022-08-05 12:29 IST   |   Update On 2022-08-05 12:29:00 IST
  • பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது.
  • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேற்கு ேராட்டரி மற்றும் குயின்சிட்டி ரோட்டரிசங்கம், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த புனிதமரியன்னை பள்ளி அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட்டது.

2-வது இடம் பிடித்த லயோலா அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த அங்குவிலாஸ் பள்ளி அணிக்கு ரூ.5ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வழங்கினார்.

மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், ரோட்டரிசங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சர்மிளா, ராஜகோபாலான், மல்லிகா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, நிர்வாகிகள் ஈசாக், தங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News