உள்ளூர் செய்திகள்
தனியார் பள்ளி பஸ் டிரைவர் தற்கொலை
- டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
- மன வருத்தத்தில் இருந்த சரவணன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா கவுண்டனூர் அருகே உள்ள மேடுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த சரவணன், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.