உள்ளூர் செய்திகள்
- கல்லூரி செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
- கடந்த 20-ம் தேதி விரக்தியில் மகேந்திரன் விஷம் குடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள நெக்குந்தி பகுதியை சேர்ந்த வேடி மகன் மகேந்திரன் (வயது18). இவர் சூளகிரி அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர் கல்லூரிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து கடந்த 20-ம் தேதி விரக்தியில் மகேந்திரன் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.