உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-09 15:28 IST   |   Update On 2023-09-09 15:28:00 IST
  • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3-ம் நபர் ஆய்வை உடனடியாக அரசு கைவிட வேண்டும்
  • ஆர்பாட்டத்திற்க்கு மனோஜ் குமார் தலைமை தாங்கினார்.

கடத்தூர், 

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3-ம் நபர் ஆய்வை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்ப தை வலியுறுத்தி கடத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடத்தூர் வட்டகிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்க்கு மனோஜ் குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித் தார். ஆசிரியர் செந்தில் குமார் அனை வரையும் வரவேற்றார்.மேலும் இந்திரா காந்தி, வேல்மு ருகன்,சாரதி, திருமால் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.

Similar News