உள்ளூர் செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

Published On 2022-07-22 09:34 GMT   |   Update On 2022-07-22 09:34 GMT
  • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

நாமக்கல்:

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளா் முருக.செல்வராசன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தை முறைப்படுத்தி, மாவட்டத்தின் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியா்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் குறைதீர் முகாம் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News