உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-24 15:09 IST   |   Update On 2022-09-24 15:09:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு, அகில இந்திய அளவில் முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டப் பொருளாளர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். துணைத் தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், பாலிசிதாரர்களுக்காக, பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

Similar News