உள்ளூர் செய்திகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
- துணைமின்நிைலயத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பிள்ளையார்பட்டி:
தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின்நிைலயத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.