- பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை அறிவிக்கபட்டுள்ளது
- காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பேராவூரணி:
பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பேராவூரணி, கொன்றைக்காடு, குருவி க்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிபட்டிணம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபாலக்காடு, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால், படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை ஜூலை.1 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர்க மலக்கண்ணன் தெரிவித்து ள்ளார்.