உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
திண்டுக்கல்லில் நாளை மறுநாள் மின்தடை
- திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அங்கநகர் துணை மின்நிலையத்தில் வருகிற 16ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திண்டு க்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன் பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துரை, விராலிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் தாடிக்கொம்பு பீடரில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னமநாயக்கன் பட்டி, பூதிப்புரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய் மூகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.