உள்ளூர் செய்திகள்

30-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2023-09-28 10:16 GMT   |   Update On 2023-09-28 10:16 GMT
  • பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி நடக்கிறது.
  • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவையாறு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட விளாங்குடி 11 கிலோ வாட் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பி தரம் உயர்த்தவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

எனவே தஞ்சை அருகே உள்ள பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News